Skip to content

தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.

காரில், நாட்டு துப்பாக்கி, வெடி மருந்துகள் இருந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரில் இருந்த கரைக்கால் மாவட்டம் ஊழியபத்து பகுதியை சேர்ந்த பாலகுரு(50), மயிலாடுதுறையை சேர்ந்த எட்வின்லியோ(36), கார் டிரைவர் கரைக்கால் நிரவி  அப்துல்காதர்(36), ஆகிய மூவரையும் திருவிடைமருதுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், மதுரையில், வெடி மருந்துகள் வாங்கும் இடத்தில், நண்பர்களின் துப்பாக்கி உரிமங்களை காட்டி 150 தோட்டாக்கள், இரண்டு கிலோ பால்ரஸ் குண்டுகள், இரண்டரை கிலோ வெடி மருந்துகளை வாங்கியுள்ளனர். மேலும், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து  இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!