Skip to content
Home » மீண்டும் இறுதிப்போட்டிக்கு செல்வோம்…. குஜராத் வீரர் கில் பேட்டி

மீண்டும் இறுதிப்போட்டிக்கு செல்வோம்…. குஜராத் வீரர் கில் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிபட்டியலில் முதல் மற்றும் 2ம் இடத்தில் உள்ளன. லக்னோ 3-ம் இடத்திலும், மும்பை 4 ம் இடத்திலும் உள்ளன.

லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குவாலிபையர் சுற்றின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. குஜராத் – சென்னை அணிகள் குவாலிபையர் 1-ல் மோத உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.

சென்னையில் நடைபெற உள்ள பிளே ஆப் குறித்து சுப்மன் கில் கூறியதாவது:, எனக்கு என் விளையாட்டு தெரியும். எந்த வீரராக இருந்தாலும் சரி நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். குவாலியபையர் 1-ல் சென்னையில் விளையாட எங்களிடம் சிறந்த பவுலிங் உள்ளது. சென்னை மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக விளையாடுவது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நாங்கள் செல்வோம் என நம்பிக்கை உள்ளது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!