Skip to content

அட்சய திருதியை நாளில்….. தமிழ்நாட்டில் ….24 டன் தங்க நகைகள் விற்பனை

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் (10-ம் தேதி) காலை 6.33 மணிக்குத் தொடங்கி நேற்று (11-ம் தேதி) அதிகாலை 4.56 மணி வரை நீடித்தது.

இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: அட்சய திருதியை தினத்தன்று ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்தது. விலை உயர்ந்தபோதும், தங்கம் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு அட்சய திருதி தினத்தன்று ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடையுள்ள தங்கம் தமிழகம் முழுவதும் விற்பனை ஆகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு அதையும் கடந்த 24ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையானது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!