Skip to content

கரூர்… அதிமுக, தேமுதிக கட்சியை சேர்ந்த 22 பேர் திமுகவில் இணைந்தனர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று கரூர் மத்திய மாநகர பகுதிக்குட்பட்ட 32வது வார்டு, முத்துராஜபுரத்தை சேர்ந்த அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளை சேர்ந்த 22 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, கரூர் மாநகர திமுக செயலாளர் கனகராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகர மத்திய பகுதி கழக பொறுப்பாளர் விஜிஎஸ் குமார் கரூர் மாநகர மத்திய கிழக்கு பகுதி கழக பொறுப்பாளர் ஆர்.எஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினர் நிவேதா மாநகர அவை தலைவர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!