Skip to content

2023

விஜய்-ன் ஹேர் ஸ்டைல் குறித்து அட்வைஸ் கொடுத்த பிரபலம்….

  • by Authour

ஜேம்ஸ் வசந்த தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ ‘வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.  தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.  அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.  இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?  ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.  நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.  ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லையே. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்!  முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்.” என பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வைகுண்ட ஏகாதசி…ருக்மாங்கதன் சரித்திர நாடகத்தில் நடித்த கிராம மக்கள்…

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை… Read More »வைகுண்ட ஏகாதசி…ருக்மாங்கதன் சரித்திர நாடகத்தில் நடித்த கிராம மக்கள்…

காரமடை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்…. வீடியோ..

  • by Authour

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாளையத்தை சேர்ந்தநவநீதகிருஷ்ணன் என்பவர் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை  நவநீத கிருஷ்ணன் வீட்டில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள் அவரது வீட்டின் முன்… Read More »காரமடை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம்…. வீடியோ..

டில்லி இளம்பெண் கொடூர கொலை…ஆளுநர் மாளிகை முன் ஆம் ஆத்மி போராட்டம்

  • by Authour

டில்லி சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுபற்றி போலீசாருக்கு… Read More »டில்லி இளம்பெண் கொடூர கொலை…ஆளுநர் மாளிகை முன் ஆம் ஆத்மி போராட்டம்

தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி பதவியேற்பு

  • by Authour

சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்தில் துணை ஆணையராக(தலைமையிடம்,நிர்வாகம் ) பணிபுரிந்து வந்த முனைவர் பா.மூர்த்திபதவி உயர்வு பெற்று அதே தாம்பரம் மண்டலத்தில் காவல்துறை துணைத்தலைவராக பதவி உயர்வு பெற்று,  சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக… Read More »தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி பதவியேற்பு

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்….

  • by Authour

திருச்சி, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார்  தேவதானம் ரயில்வே டிராக் அருகே நின்றுள்ளார். அப்போது இபி ரோட்டை சேர்ந்த கவுதம்(21), அவரின்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்….

இலங்கை கைது செய்த சீர்காழி மீனவர்கள் யாழ் சிறையில் அடைப்பு

  • by Authour

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 60க்கும் மேற்பட்டோர் சுமார் 15க்கும் மேற்பட்ட படகுகளில் கடந்த 27-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன்… Read More »இலங்கை கைது செய்த சீர்காழி மீனவர்கள் யாழ் சிறையில் அடைப்பு

டில்லி இளம்பெண்ணை காரில் நிர்வாணமாக இழுத்து சென்று கொலை

  • by Authour

டில்லியை சேர்ந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம்பெண், சாலை விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு டில்லியின் கஞ்சவாலா பகுதியில், அவரது ஸ்கூட்டர் மீது, குடிபோதையில் 5 பேர் வந்த கார் மோதியது. அந்த… Read More »டில்லி இளம்பெண்ணை காரில் நிர்வாணமாக இழுத்து சென்று கொலை

பணமதிப்பிழப்பு … உச்சநீதிமன்றத்தின் மாறுபட்டதீர்ப்பால் மகிழ்ச்சி….ப.சிதம்பரம் கருத்து

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த… Read More »பணமதிப்பிழப்பு … உச்சநீதிமன்றத்தின் மாறுபட்டதீர்ப்பால் மகிழ்ச்சி….ப.சிதம்பரம் கருத்து

தஞ்சை அருகே 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த பனிப் பொழிவு மறுநாள் காலை 8  மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக… Read More »தஞ்சை அருகே 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு….

error: Content is protected !!