Skip to content
Home » பிளஸ்2 தேர்வில் தோல்வி…2 மாணவர்கள் தற்கொலை

பிளஸ்2 தேர்வில் தோல்வி…2 மாணவர்கள் தற்கொலை

சென்னை ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்.தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் தேவா(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வை சரியாக எழுதவில்லை. இதுபற்றி அவர் பெற்றோரிடம் கூறிவந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.  இந்த நிலையில் இன்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. அப்போது தேவா தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். அவர் தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் குறைந்த மதிப்பெண்ணும் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனால் மாணவர் தேவா மிகவும் மனவேதனை அடைந்தார்.

அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி அடுத்த தேர்வில் பரீட்சை எழுதி கொள்ளலாம் என்று தெரிவித்தனர். எனினும் தேர்வு தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்த தேவா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் கதறி துடித்தனர். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோல திருவண்ணாமலை அருகேஹரி என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!