திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் கடந்த 28ஆம் தேதி குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்த இறங்கி வீட்டிற்கு நடந்து சென்ற பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஆரோக்கிய அம்மாள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துசென்றான். இச்சம்பவம் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
அதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள கோகுல் நகரை சேர்ந்தவர் முத்து வெள்ளை இவரது மனைவி இந்திரா (58) அந்த பகுதியில் உள்ள மாவு அரைக்கும் மில்லிற்கு மாவு அரைப்பதற்காக நடந்து சென்ற பொழுது பின்னால் ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் இந்திராவின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றான் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இரண்டு வழிபரிகளில் சம்பந்தப்பட்டவர் ஒரே நபர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் திருவெறும்பூர் பங்காரு அடிகளார் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (38) என்பவனை வழிபறி வழக்கில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். வெங்கடேஷ் திருவெறும்பூர் பகுதியில் 28 ஆம் தேதி நடந்த இந்த இரண்டு வழிபறி மட்டுமல்லாமல் மேலும் சில வழிபறி வழக்குகளில் தொடர்புடையது விசாரணையில் தெரிய வந்துள்ளது.