Skip to content
Home » திருச்சியில் 2 மாத குழந்தை பரிதாப பலி……

திருச்சியில் 2 மாத குழந்தை பரிதாப பலி……

  • by Senthil

திருச்சியில் இரண்டு மாத குழந்தை பரிதாப பலி….

திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில் இரண்டு மாத குழந்தை சேர்க்கப்பட்டது. திண்டுக்கல் குழந்தை நல கமிட்டி சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு தீபா என பெயரிடப்பட்டது. இந்நிலையில் அக்குழந்தைக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. தீவிரசிகிச்சை அளிக்கப்படும் சிக்கியது பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து சாக்ஸ்சீடு சமூக நல பணியாளர் சுகப்பிரியா கொடுக்க புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

———————————-

சிகரெட் பாக்கெட் திருடர்களை தேடி வரும் திருச்சி போலீசார்…..

திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்தவர் பரிதாபேகம்(50). இவர் பாலக்கரை காஜாபேட்டை மெயின் ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல கடையை சாத்தி விட்டு சென்றவர் மீண்டும் திறக்க வந்த போது கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் போலீசார் வந்து நடத்திய விசாரணையில் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் வைக்கப்பட்டிருந்த ஐந்து கோல்ட் பில்டர் சிகரெட் பாக்கெட்டுகளை திருடர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து சிகரெட் பாக்கெட் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

—————————-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!