Skip to content
Home » திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

திருச்சி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்…. சிக்கிய 3 வாலிபர்கள்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி போலீசார் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது டூவீலரில் அந்த வழியாக வந்த 3பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளர். பின்னர் அவர்களிடம் உரிய முறையில் போலீசார் விசாரித்த பொழுது அவர்கள் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சேர்ந்த ஆரோக்கிய நிக்கோலஸ் (24), அதே பகுதியை அஜித்குமார் (24), துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த  கருவா (எ) ராமச்சந்திரன் (24) என்பதும் தெரியவந்ததோடு அவர்கள் டூவீலரில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது டூவீலரையும் பறிமுதல் செய்து   3 வாலிபர்களை கைது செய்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து 3 வாலிபர்களை திருச்சி 6வது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!