கரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் திருச்சி குற்றப் புலனாய்வுத் துறை சார்பில்,
காவல் துணைக் கண்காணிப்பாளர் சுதர்சன் மற்றும் காவல் ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர், ரோந்து
பணியின் போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குளித்தலை தாலுகா, சின்னரெட்டிபட்டி அருகே வாகனதணிக்கை செய்த போது டெம்போ வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தில் சுமார் 1,200 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை கைப்பற்றி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சார்ந்த வாகன ஓட்டுநர் ஏழுமலை வயது 47 என்பவரைக் கைது செய்து கரூர் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரைைண மேற்கொண்டு வருகிறார்.