10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. வழக்கம் போல இந்த ஆண்டும் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது. 2ம் இடத்தை சிவகங்கை மாவட்டமும்(97.53%), 3ம் இடத்தை விருதுநகரும்(96.22%) பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் 95.99% தேர்ச்சி பெற்று 4வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் 95.58% தேர்ச்சி பெற்று 5வது இடத்தையும் பிடித்தது.
12,638 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். இதில் 3,718 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1026 அரசு பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
அரசு பள்ளிகள் 87.45%, அரசு உதவிபெறும் பள்ளிகள் 92.24%, தனியார் பள்ளிகள் 97.38% தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.