Skip to content

10ம் வகுப்பு ரிசல்ட்….. அரியலூர் மாவட்டம் முதலிடம்….. திருச்சிக்கு 5ம் இடம்….. வேலூர் கடைசி

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில்  8 லட்சத்து 94 ஆயிரத்து264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 91.55% தேர்ச்சி ஆகும். இது கடந்த ஆண்டை விட 0.16% கூடுதல் தேர்ச்சி . வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  அதாவது 5.95% மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் 100க்கு 100 மார்க் வாங்கி உள்ளனர் என்ற விவரம் வருமாறு:  தமிழில் 8 மாணவர்கள்.  ஆங்கிலம் 415, கணிதம் 20 .691,  அறிவியல்5104, , சமூக அறிவியல் 4428  பேர் 100க்கு 100 மார்க் வாங்கி உள்ளனர்.

தேர்ச்சியில் சாதனை படைத்த மாவட்டங்கள். அரியலூர் மாவட்டம்  முதலிடம் பிடித்துள்ளது.   இந்த மாவட்டத்தி்ல் 97.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்டளனர். 2வதாக சிவகங்கை, 3வதாக  ராமநாதபுரம், 4வதாக  கன்னியாகுமரி, 5வதாக திருச்சி மாவட்டங்கள்   சாதனை படைத்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர். எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர். இது எத்தனை சதவீதம் என்ற விவரம் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!