அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் கடந்த வாரம் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. இதைத்தொடர்ந்து நேருவின் தம்பி ரவிச்சந்திரன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதனை ஏற்று பிற்பகல் 2 மணி அளவில் நுங்கம்பாக்கத்தல் உள்ள ED அலுவலகத்துக்கு ரவிச்சந்திரன் சென்றார். அவரிடம் சுமாா் 1 மணி நேரம் விசாரணை நடந்தது. 3 மணி அளவில் விசாரணை முடிந்து அவர் வீடு திருமு்பினார்.
அமைச்சர் கே. என். நேருவின் தம்பியிடம் 1 மணி நேரம் ED விசாரணை
- by Authour
