Skip to content
Home » 2022ல் 1.25லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா

2022ல் 1.25லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பத்திரிகையாளர் சந்திப்பில்  கூறியதாவது: இந்தியாவில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022 ஒற்றை நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்து உள்ளனர். இதன்படி, நாங்கள் ஏறக்குறைய 1.25 இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கி இருக்கிறோம் . சில விண்ணப்பதாரர்களின் கோரிக்கையான நீட்டிக்கப்பட்ட விசாக்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பதை ஏற்று கொள்கிறோம். விசாக்களை பெறுவதற்கான நேர்காணலுக்கான காத்திருப்பு நேரம் குறைவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் எடுத்து வருகிறோம் . தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பை மேற்கொள்வதில் நாங்கள் ஈடுபடுவதுடன் நேர்மையான கோரிக்கைகளுடன் கூடிய அமெரிக்கர் அல்லாத நபர்களின் பயண வசதிகளை செய்து வருகிறோம். சரியான தருணத்தில் விசா வழங்குவது என்பது அமெரிக்க பொருளாதாரத்திற்கு முக்கியம் வாய்ந்தது மற்றும் அதுவே நிர்வாகத்தின் இலக்கும் ஆகும்

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முன்பு, மூத்த அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் 2022-ம் ஆண்டு நவம்பரில் கூறும்போது, 2023-ம் ஆண்டுக்குள் விசாக்களை பெறுவதில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும். மெக்சிகோவுக்கு அடுத்து அதிக விசாக்களை பெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2-வது இடம் பிடிக்க கூடும் என்று கூறினார். விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் குறைவதற்காக, எச் மற்றும் எல் பணியாளர் விசாக்களை பெறும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக 1 லட்சம் வாய்ப்பிடங்கள் திறக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!