சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபர்களிடம் பேட்டியில் கூறியதாவது.. ஆதார் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை 1.03 கோடிபேர் இணைத்துள்ளனர். அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். ஆதார் -மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிசம்பர் 25 மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது. மற்ற அனைத்து நாட்களும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மின்
ஊழியர்களின் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை நடக்கும்போதே போராட செல்வது சரியல்ல. டிசம்பர் 31க்கு பின் அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும். டிசம்பர் 31க்குள் எவ்வளவு பேர் ஆதார் இணைத்துள்ளனர் என்பதை பொறுத்து அவகாசம் வழங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.