Skip to content
Home » பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

  • by Senthil

அரியானா மாநில விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய  வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். இதுகுறித்த புகாரில் அந்த பெண் பயிற்சியாளர் கூறி இருப்பதாவது:- விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங் எனக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பினார், எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் கூறினார் என்னிடம் இருந்த சில ஆவணங்களுடன் சந்தீப் சிங்கை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க சென்றேன் அங்கு சென்றபோது,மந்திரி என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

அவர் என்னை அவரது அவரது வீட்டில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். என் ஆவணங்களை மேசையில் வைத்து விட்டு என் காலில் கை வைத்தார், அவர் உன்னை முதல் முறையாகப் பார்த்தபோது, எனக்கு பிடித்து விட்டது என கூறினார். மேலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன், என்று கூறினார்.

அவர் என் மீது வைத்த கையை தட்டிவிட்டேன். அவர் என் டி-ஷர்ட்டைக் கிழித்துவிட்டார். நான் அழுதுகொண்டே இருந்தேன், உதவிக்காக சத்தம்போட்டேன். அவருடைய ஊழியர்கள் அனைவரும் இருந்தபோதிலும், யாரும் எனக்கு உதவவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.

அரியானா பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில், 354, 354ஏ, 354பி, 342, 506 ஆகிய பிரிவுகளின்கீழ் சண்டிகரில் உள்ள போலீஸ் நிலையம் செக்டார் 26 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியானா உள்துறை மந்திரி அனில் விஜை அம்பாலாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து விட்டு பெண் பயிற்சியாளர் இது குறித்து கூறியதாவது:- “உள்துறை மந்திரி எப்பொழுதும் எங்களுக்கு உதவுகிறார், விளையாட்டு மந்திரியாக இருந்த காலத்திலிருந்தே அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன, அவர் எப்போதும் உதவி செய்வார். அவர் என் பேச்சைக் கேட்பார், நீதியின் பக்கம் இருப்பார் என்று இன்றும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர் ஒருவர் எப்படி தவறாக நடந்து கொண்டார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நானும் ஒரு வீராங்கனைதான், பிப்ரவரியில் இருந்து இது வரை இந்த நபரின் இத்தகைய மோசமான நடத்தையை நான் எவ்வளவு பொறுமையாக பொறுத்துக்கொண்டேன் என்பதை சிந்தித்து பாருங்கள்.விளையாட்டுத் துறையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று பயந்ததால், இந்த சம்பவத்தைப் பற்றி இதற்கு முன் வாய் திறக்கவில்லை. அவர் ராஜினாமா செய்து சிறையில் அடைக்கப்பட்டவுடன்,பாதிக்கப்பட்டவர்கள் மனம் திறந்து பேச கண்டிப்பாக முன்வருவார்கள்.ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர் மற்ற தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களிடம் எப்படி தவறாக நடந்து கொள்கிறார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

அரியானா மந்திரி சந்தீப் சிங் விளையாட்டு துறையை ராஜினாமா செய்தார் முதல் மந்திரி மனோகர் லால் கட்டாரிடம் தனது விளையாட்டு இலாகாவை ஒப்படைத்ததாக கூறினார். எனினும் அவர் மந்திரி சபையில் இருந்து விலகவில்லை. என்மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என நிராகரித்த மந்திரி சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். “என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன். விசாரணை அறிக்கை வரும் வரை விளையாட்டு துறையின் பொறுப்பை முதல் மந்திரியிடம் ஒப்படைக்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!